sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம் கோலாகலம்

/

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம் கோலாகலம்

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம் கோலாகலம்

சிவன் கோவில்களில் அன்னாபிேஷகம் கோலாகலம்


ADDED : நவ 05, 2025 08:52 PM

Google News

ADDED : நவ 05, 2025 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரியில் ஐப்பசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு, அனைத்து சிவன் கோவில்களிலும், இறைவனுக்கு அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தில், சிவன் கோவில்களில் இறைவனுக்கு அன்னாபிஷேக விழா நடப்பது வழக்கம். நேற்று, ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, ஊட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சிவன் கோவில்களிலும், சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை, அலங்காரம் நடந்தது.

அதேபோல், காந்தள் காசி விஸ்வநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், பால முருகன் கோவிலில் உள்ள சிவனுக்கு உட்பட பல்வேறு கோவில்களில் அன்னாபிேஷகம் நடந்தது.

அன்னாபிஷேகம் முடிந்தவுடன், கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல், அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

சில கோவில்களில் பெண்கள் பால்குட ஊர்வலம் எடுத்துச் சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு சாகம்பரி அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us