ADDED : ஆக 18, 2026 06:31 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி ஒன்னதலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி சார்பில், போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியர் மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் பாபு முன்னிலை வகித்தார்.
பள்ளி மாணவர்கள், போதை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி பொதுமக்கள் மத்தியில் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, போதை பொருட்களின் பயன்பட்டால் ஏற்படும் தீமைகள், பொருளாதாரம் மற்றும் சமுதாய சீரழிவு குறித்து, தலைமையாசிரியர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுக்கப்பட்டது.
