ADDED : மார் 05, 2024 11:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சமீப காலமாக கரடி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு உணவுகளை தேடி வந்து செல்கின்றன.
இந்நிலையில், கரோலினா பகுதியில் அவ்வப்போது இரவு, 8:00 மணி அளவில், 3 கரடிகள், சாலையை கடந்து செல்கின்றன.நள்ளிரவில் மட்டுமே வந்து சென்ற கரடிகள் தற்போது மாலை நேரங்களில் உலா வருகின்றன.
இப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர் ராஜன் கூறுகையில்,'' இப்பகுதிக்கு பஸ் இல்லாததால், மாலை சிறப்பு வகுப்புகள் முடித்து இரவு, 7:30 மணிக்கு மேல் பள்ளி மாணவ மாணவிகள் இவ்வழியாக நடந்து செல்கின்றனர். இவர்களை கரடிகள் தாக்கும் அபாயம் உள்ளது. வனத்துறையினர் கண்காணித்து கரடிகளுக்கு கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும். மேலும், பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்,''என்றார்.

