sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 அதிகரட்டி வழியாக மீண்டும் பஸ் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

/

 அதிகரட்டி வழியாக மீண்டும் பஸ் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

 அதிகரட்டி வழியாக மீண்டும் பஸ் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி

 அதிகரட்டி வழியாக மீண்டும் பஸ் இயக்கம்: மக்கள் மகிழ்ச்சி


ADDED : டிச 12, 2025 07:11 AM

Google News

ADDED : டிச 12, 2025 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: ஊட்டி -குன்னுார் வழித்தடத்தில் அதிகரட்டி வழியாக மீண்டும் அரசு பஸ் இயக்கப்பட்டதால் பல்வேறு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

குன்னுார் ஊட்டியில் இருந்து அதிகரட்டிக்கு இரு பஸ்கள் இயக்கப்பட்டன. அதில், குன்னுார்- ஊட்டி இடையே அதிகரட்டி வழியாக, இரு அரசு பஸ்கள் விடியல் பயணமாகவும் மாற்றி இயக்கப்பட்டது. அந்த பஸ்களால், சின்ன கரும்பாலம், சேலாஸ், கெந்தளா, சன்னிசைடு, கோடேரி, குன்னகம்பை, மணியாபுரம், முட்டிநாடு, அதிகரட்டி, பாலகொலா, நுந்தளா, தாம்பட்டி லவ்டேல், காந்தி பேட்டை மக்கள் பயனடைந்தனர்.

விவசாய பணிகளுக்கு செல்லும் மகளிர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மற்றும் குன்னுார் ஊட்டி அரசு கலை கல்லுாரி செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

சமீபத்தில் இந்த பஸ்களின் கால அட்டவணை மாற்றப்பட்டு இயக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாக்கினர். இந்த தகவலை தொடர்ந்து, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, மீண்டும் அதிகரட்டி வழியாக பழைய கால அட்டவணைப்படி குன்னுார்- ஊட்டி இடையே மீண்டும் பஸ் இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால், பல்வேறு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us