sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

/

 காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

 காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு

 காசி தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பு


ADDED : டிச 29, 2025 06:21 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: ஊட்டியில் காசி தமிழ்ச் சங்கம் மற்றும் இந்து பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்தும் 'தமிழ் கற்கலாம்' நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்து பனாரஸ் பல்கலை கழகம் சார்பில், மாநிலம் முழுவதும், 10 நாட்கள் நடைபெறும் தமிழ் கற்கலாம் நிகழ்ச்சியில், 300 மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

அதில், கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள், 30 பேர் பங்கேற்று, கோவை உட்பட, பல்வேறு பகுதிகளில், பழங்குடியினர் மக்களின் வாழ்க்கை முறை, கலாசாரம் குறித்து தெரிந்து கொள்வதுடன், 'தமிழ் கற்கலாம்' என்ற தலைப்பில், தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்து, விளக்கி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக, ஊட்டிக்கு நேற்று வந்திருந்த மாணவர்கள், முத்தநாடு மந்து பகுதியில் தோடர் மக்களின் மொற்பர்த் பண்டிகையில் பங்கேற்றனர்.

தோடரின மக்களின் தெய்வ வழிபாடு, பூஜை நன்முறை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சியை கண்டு களித்து வியந்தனர். கல்லுாரி பேராசிரியர்கள் சந்தோஷ் குமார் மற்றும் சவுந்தர்ராஜன் ஆகியோர், மாணவர்களை ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.






      Dinamalar
      Follow us