sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காமன் கூத்து: இரவில் துவங்கி விடியும் வரை கோலாகலம்

/

காமன் கூத்து: இரவில் துவங்கி விடியும் வரை கோலாகலம்

காமன் கூத்து: இரவில் துவங்கி விடியும் வரை கோலாகலம்

காமன் கூத்து: இரவில் துவங்கி விடியும் வரை கோலாகலம்


ADDED : மார் 03, 2024 10:51 PM

Google News

ADDED : மார் 03, 2024 10:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் ஆமைக்குளத்தில் காமன் கூத்து விழா இரவில் துவங்கி விடியும் வரை நடந்தது.

கூடலுார் ஆமைக்குளம் பகுதியில், ஆண்டுதோறும் மாசி மாதம் 'காமன் கூத்து' விழா பாரம்பரிய முறைப்படி நடந்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து ரதி-மன்மதன் வேடமிட்ட இளைஞர்கள், இரவில் ஆமைக்குளம், பாண்டியர் டான்டீ, மரப்பாலம், பால்மேடு ஆட்டிக்கொல்லி, சீனக்கொல்லி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நாள்தோறும் சென்று நடனமாடி வந்தனர்.

இதன், நிறைவு விழா நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு துவங்கியது. கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்து, ரதி- மன்மதன் ஆட்டமும் நடந்தது. நள்ளிரவு, 12:30 மணிக்கு ரதி - மன்மதன் ஊர்வலமாக தேவசபைக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி; அவர்கள் திருமணம்; மொய் விருந்து உபச்சாரம் நிகழ்ச்சிகள் நடந்தது.

தொடர்ந்து, சிவபெருமான் தியானத்தில் அமரும் நிகழ்ச்சி, துாதுவன் வருகை தட்சன் யாகம் நடந்தது. தொடர்ந்து, வீரப்பத்திரன் வருகை; பின் தட்சன் வதை படலம்; அதிகாலை எமன் பாச கயிற்றுடன் வருகை; 5:45 மணிக்கு சிவப்பெருமான் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரிக்கும் நிகழ்வுகள் பாரம்பரியம் மாறாமல் அரங்கேறின.

இரவு துவங்கி, விடிய. விடிய நடந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மூன்றாம் நாளான நாளை, மன்மதன் உயிர்த்து எழும் நிகழ்ச்சி நடக்கிறது.






      Dinamalar
      Follow us