sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவில் வளாகத்தில் சந்தன மரம் கடத்தல்

/

கோவில் வளாகத்தில் சந்தன மரம் கடத்தல்

கோவில் வளாகத்தில் சந்தன மரம் கடத்தல்

கோவில் வளாகத்தில் சந்தன மரம் கடத்தல்


ADDED : ஆக 11, 2011 10:57 PM

Google News

ADDED : ஆக 11, 2011 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலூர் : நீலகிரி மாவட்டம், அய்யன்கொல்லி பஜார் அய்யப்பன் கோவில் வளாகத்தில் சந்தனம் மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் மசினகுடி சோதனைச் சாவடி அருகே ஒரு சந்தனமரமும், கூடலூர் - ஊட்டி சாலையில் கோக்கால் என்ற இடத்தில் மூன்று சந்தன மரங்களும் வெட்டி கடத்தப்பட்டுள்ளன.

மசினகுடியில் மரம் வெட்டியது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோக்கால் பகுதயில் மரம் வெட்டியது குறித்து வனத்துறையின் நடவடிக்கை, மூடி மறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜார் பகுதியை ஒட்டி அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்திலிருந்த சந்தன மரம் ஒன்றும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும், கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வனத்துறையினர் தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால், எஞ்சியிருக்கும் பல அரிய வகை மரங்களும் காணாமல் போகும் அபாயம் உள்ளது.






      Dinamalar
      Follow us