sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்

/

'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்

'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்

'ஓவேலி' மக்னா யானை உலா; அச்சத்தில் பொதுமக்கள்


ADDED : ஆக 14, 2025 08:12 PM

Google News

ADDED : ஆக 14, 2025 08:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மேல் கூடலுார் குடியிருப்பு பகுதியில் இரவில் உலா வரும் 'ஓவேலி' மக்னா யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலுார் ஓவேலி பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மக்னா யானை ஒன்று தினமும் இரவில் முகாமிட்டு, விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்த யானைக்கு, வனத்துறையினர் 'ஓவேலி' மக்னா யானை என பெயர் வைத்துள்ளனர்.

இந்த யானை, கடந்த இரண்டு நாட்களாக, மேல் கூடலுார் பகுதியில் முகாமிட்டுள்ளது. பகலில் தனியார் எஸ்டேட் பகுதியில் இருக்கும் யானை, இரவில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை மேல் கூடலுார் நடுக்கூடலூர் குடியிருப்பு பகுதியில் உலா வர துவங்கியுள்ளது. வனத்துறையினர், இதனை விரட்டினாலும், மீண்டும் வருகிறது. இதனால், மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us