sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

/

மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து இரு மாநில போக்குவரத்து பாதிப்பு


ADDED : டிச 03, 2024 06:32 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே, பிதர்காடு பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்து, தமிழக-கேரள போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும், குளிரான காலநிலை நிலவியது.

இந்நிலையில், கூடலுாரில் இருந்து பிதர்காடு வழியாக, கேரளா மாநிலம் வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் நெடுஞ்சாலையில், கைவட்டா என்ற இடத்தில், சாலையோரத்தில் காய்ந்த நிலையில் இருந்த மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.

இதனால், தமிழக - கேரளா போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், மின் கம்பம் உடைந்து விழுந்து, மின் தடை ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் இணைந்து, மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஒரு மணிநேரத்துக்கு பின்பு, இரு மாநில போக்குவரத்து சீரானது.






      Dinamalar
      Follow us