sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு

/

உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு

உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு

உண்ணி செடிகளில் எரிபொருள் தயாரிப்பு


ADDED : நவ 06, 2025 11:04 PM

Google News

ADDED : நவ 06, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்: மசினகுடியில் உண்ணி செடிகளிலிருந்து பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி பகுதிகளில் அகற்றப்படும் உண்ணி செடிகளை சேகரித்து, இயந்திரம் உதவியுடன் துகள்களாக மாற்றி உலர வைத்து, மசினகுடியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையில் இயந்திரங்கள் மூலம் பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது..

முதல் கட்டமாக 9 டன் பிரிக்வெட்ஸ் என்ற எரிபொருள் தயாரித்து, கூடலூர் சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த பணிகளை கலெக்டர் லட்சுமி பவ்யா ஆய்வு செய்தார்.

மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 10 லட்சம் ரூபாய், சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு மூலம் 8 லட்சம் ரூபாய் என, 18 லட்சம் ரூபாய் டிரையர் இயந்திரம் வாங்கவும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 70 சதவீத மானியத்திலும் 30 சதவீத வனத்துறை நிதியிலிருந்து சிமெண்ட் தரை தளம் அமைக்கவும் கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us