sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் வீசப்படும் மது பாட்டில்கள்; சுற்றுலா பயணிகளால் சூழலுக்கு ஆபத்து

/

சாலையோரம் வீசப்படும் மது பாட்டில்கள்; சுற்றுலா பயணிகளால் சூழலுக்கு ஆபத்து

சாலையோரம் வீசப்படும் மது பாட்டில்கள்; சுற்றுலா பயணிகளால் சூழலுக்கு ஆபத்து

சாலையோரம் வீசப்படும் மது பாட்டில்கள்; சுற்றுலா பயணிகளால் சூழலுக்கு ஆபத்து


ADDED : அக் 07, 2025 08:58 PM

Google News

ADDED : அக் 07, 2025 08:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; 'கூடலுார் கோழிக்கோடு சாலையோரம் காலி பாட்டில்களை வீசி செல்வதை தடுக்க, கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.

'கூடலுார் பாண்டியார் குடோன் அருகே, கோழிக்கோடு சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது,' என, வனத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். இந்நிலையில், அதனை ஒட்டிய சிமென்ட் தடுப்பு பகுதியில் நேற்று முன்தினம், இரவு சிலர் அமர்ந்து, மது குடித்துவிட்டு காலி மது பாட்டில்கள், சாலையோரம் வீசி சென்றுள்ளனர்.

சாலையோரத்தில் மது பாட்டில்களை இருப்பதை பார்த்து அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து கூடலுார் வழியாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர், சாலையோரம் அமர்ந்து மது குடித்துவிட்டு பாட்டில்களை சாலையோரம் வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனால், வனச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இந்நிலையில், 'பார்க்கிங்' தடை செய்யப்பட்ட, சாலையோரம் அமர்ந்து மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை சாலையில் வீசி சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற செயல்களை தடுக்க, இரவு நேரத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிர படுத்த வேண்டும்,'என்றனர்.






      Dinamalar
      Follow us