sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

/

 திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

 திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

 திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு


ADDED : டிச 11, 2025 05:49 AM

Google News

ADDED : டிச 11, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் கோழிக்கோடு சாலை, டி.கே.,பேட்டை அருகே திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கூடலுார் நகராட்சி பகுதியில், திறந்தவெளியில் குப்பைகள் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம், நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து அகற்றி வருகின்றனர். எனினும், நகரின் சில பகுதிகளில், திறந்த வெளியில் சிலர் குப்பைகள் கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில், கோழிக்கோடு சாலை, டி.கே., பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் திறந்து வெளியில் குப்பைகள் குவிந்துள்ளது. அவற்றை நகராட்சி ஊழியர்கள் அகற்றி வருவதுடன், 'திறந்தவெளியில் குப்பைகளை கொட்ட வேண்டாம்,' என, அறிவுறுத்தி வருகின்றனர்.

மக்கள் கூறுகையில்,'நகராட்சி அதிகாரிகள் நகரின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு, திறந்த வெளியில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us