/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென் மாநில தேயிலை ஏலங்களில் ரூ.40.68 கோடி வருவாய்
/
தென் மாநில தேயிலை ஏலங்களில் ரூ.40.68 கோடி வருவாய்
ADDED : நவ 03, 2025 10:04 PM
குன்னூர்:  தென் மாநில அளவிலான தேயிலை ஏலங்களில், 40.68 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 44வது ஏலத்தில், 16.91 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது; 16.18 லட்சம் கிலோ விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, ரூ.102.38 என இருந்தது. மொத்த வருமானம், 16.56 கோடி ரூபாய் கிடைத்தது. சராசரி விலை ரூ.2.60 உயர்ந்தது.
கடந்த ஏலத்தில், 19.38 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 17.54 லட்சம் கிலோ விற்றது. இதில், 2.47 லட்சம் கிலோ வரத்தும், 1.36 லட்சம் கிலோ என விற்பனை குறைந்தது. 98 லட்சம் ரூபாய் வருவாய் சரிந்தது.
குன்னூர் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்பட்டதில், 1.16 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில் 100 சதவீதம் விற்றது. சராசரி விலை கிலோவிற்கு, 90.50 ரூபாயாக இருந்தது; 1.46 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தில், 1.43 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 1.37 லட்சம் கிலோ விற்பனை இருந்தது. 27 ஆயிரம் கிலோ வரத்தும், 21 ஆயிரம் கிலோ விற்பனையும் குறைந்தது. கடந்த ஏலத்தில் 1.20 கோடி ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், சராசரி விலை கிலோவிற்கு 3 ரூபாய் ஏற்றம் கண்டதால், இந்த ஏலத்தில், 26 லட்சம் ரூபாய் கூடுதலானது.
கடந்த 43வது ஏலம் ரத்து செய்யப்பட்ட, கோவை ஏல மையத்தில், 44வது ஏலத்தில், 5.06 லட்சம் கிலோ வந்ததில், 4.53 லட்சம் கிலோ என 89.53 சதவீதம் விற்றது. சராசரி விலை, ரூ.140.16 என இருந்தது. 6.35 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கொச்சி ஏல மையத்தில், 10.36 லட்சம் கிலோ வந்ததில், 9.64 லட்சம் கிலோ 93.06 சதவீதம் விற்றது. சராசரி விலை, 169.15 ரூபாய் என இருந்தது. 16.31 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
கடந்த ஏலத்தில், 10.78 லட்சம் வந்ததில், 9.96 லட்சம் கிலோ விற்றது; 42 ஆயிரம் கிலோ வரத்தும், 32 ஆயிரம் கிலோ விற்பனையும் குறைந்தது. கடந்த ஏலத்தில் 16.89 கோடி ரூபாய் வருவாய் இருந்த நிலையில், இந்த ஏலத்தில், 58 லட்சம் ரூபாய் சரிந்தது.
தென் மாநில அளவில் இந்த நான்கு தேயிலை ஏலங்களிலும், 40.68 கோடி ரூபாய் கிடைத்தது.

