sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்

/

கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்

கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்

கோவிலில் நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சி அசத்தல்


ADDED : அக் 02, 2025 08:52 PM

Google News

ADDED : அக் 02, 2025 08:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:தேவாலா வேட்டைக்கொருமகன், கோவிலில் விஜயதசமி பூஜையை முன்னிட்டு பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

தேவாலா பகுதியில் பிரசித்தி பெற்ற வேட்டைக்கொருமகன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் கடந்த, 9 நாட்களாக நவராத்திரி பூஜை நடத்தப்பட்டு, மகளிர் குழுவினர் சார்பில் சிறப்பு பூஜைகள் செய்ததுடன், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தெய்வங்களின் நாமங்களை பஜனையாக பாடப்பட்டது.

இறுதி நாளான நேற்று கோவில் கமிட்டி தலைவர் ஹரிஹரன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும் கோவில் வளாகத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

கோவில் நிர்வாகி சுரேஷ்குமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை பரதநாட்டிய பயிற்சியாளர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவிகள், டுவிஸா, ஜனனி, ஜெசி, பவிஷ்கா, ராக ஸ்ரீ, யாஷிகா, ஸ்ரீ ராக சுதர்சனா ஆகியோர் சுமார் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பரதநாட்டிய நிகழ்ச்சியில் அசத்தினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெற்றோர்கள் சார்பில் ஹரிராமன் செய்திருந்தார். கோவில் கமிட்டி செயலாளர் பிஜூ நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us