ADDED : ஆக 20, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் நெடுகுளா முக்கிய நீர்ப்படிய நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இங்கு, நுாற்றுக்கான ஏக்கர் பரப்பளவில் மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, மழை அறவே பொய்த்து விட்ட நிலையில், விவசாய நிலங்களில் ஈரப்பதம் இல்லாமல் உள்ளது.
காய்கறி சாகுபடிக்கு உகந்த நேரத்தில் மழை பெய்யாததால், மேடான நிலங்களில் பயிர் செய்ய ஓடை தண்ணீரை விவசாயிகள் நம்பியுள்ளனர். ஓடையை மறித்து, இரவு நேரங்களில் சிறுக, சிறுக தண்ணீரை சேமித்து வருகின்றனர். தற்போது, சேமித்த தண்ணீரை, மோட்டார் உதவியுடன், ஓஸ் பைப் வாயிலாக பாய்ச்சி வருகின்றனர்.
