/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பேய் வலைகள் பிரிக்க கூடம்
/
ராமேஸ்வரத்தில் பேய் வலைகள் பிரிக்க கூடம்
ADDED : ஏப் 01, 2025 05:54 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடலில் மிதக்கும் பேய்வலைகளை சேகரிக்கும் மீனவர்கள் அதனை பிரித்து எடுக்க கூடம் அமைக்கப்பட்டது.
கடலில் மீனவர்கள் வீசும் கழிவு வலைகளில் அரிய வகை மீன்கள் சிக்கி உயிரிழக்கின்றன. இதனை பேய் வலைகள் என கடல்சார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வலைகளை சேகரித்து கரையில் கொண்டு வர மீனவர்களிடம் தங்கச்சிமடத்தில் உள்ள சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்துகிறது.
இந்த வலைகளை கடற்கரையில் பிரித்து எடுக்க சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ராமேஸ்வரம் அருகே வேதாளை, வெள்ளப்பட்டி கடற்கரை கிராமத்தில் மையம் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேதாளை சிங்கிவலசை கிராமத்தில் மற்றொரு மையம் நேற்று திறக்கப்பட்டது.
இதில் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வேல்விழி, வேதாளை ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், ஆராய்ச்சி மைய தொழில்நுட்ப உதவியாளர் கெவின் உட்பட பலர் பங்கேற்றனர்.

