sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு

/

 மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு

 மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு

 மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டு


ADDED : டிச 26, 2025 05:26 AM

Google News

ADDED : டிச 26, 2025 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜன.3 ஆருத்ரா தரிசனம்

பரமக்குடி: பரமக்குடி சிவன் கோயில்களில் மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது.

பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் தினமும் அதிகாலை மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடப்பட்டு வருகிறது. இங்கு ஆருத்ரா விழாவையொட்டி நேற்று இரவு மாணிக்கவாசக சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டது. தினமும் காலையில் மாணிக்கவாசகர் ஆடி வீதி பிரதட்சணம் வருகிறார்.

ஜன., 2 இரவு சிவகாமசுந்தரி நடராஜமூர்த்தி உற்சவர் பச்சை சாத்தி புறப்பாடாகிறார்.

பின்னர் மகா மண்டபத்தில், ஆனந்த தாண்டவம் ஆடும் நிகழ்வுகள் நடக்கிறது. மறுநாள்(ஜன. 3) அதிகாலை கோயில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் நடராஜருக்கு மகா அபிஷேகம், ஆருத்ரா தரிசனம் நடக்க உள்ளது.

இதே போல் மீனாட்சி சுந்தரேஸ்வரர், எமனேஸ்வரமுடையவர், நயினார்கோவில் நாகநாதசுவாமி என அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ர தரிசன விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us