sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை யோசனை

/

 நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை யோசனை

 நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை யோசனை

 நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை யோசனை


ADDED : நவ 16, 2025 10:57 PM

Google News

ADDED : நவ 16, 2025 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: -தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் வட்டாரத்தில் நெற்பயிரில் ஏற்பட்டுள்ள பழுப்பு நிற நோய் தாக்கம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் குழுவினர் ஆய்வு செய்து சத்து குறைபாட்டினை போக்குவதற்கு உரங்கள் பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர்.

செல்வநாயகபுரம், கீரனுார், காக்கூர், குமாரக்குறிச்சி, ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால், சித்திரங்குடி, கீழத்தூவல், மரவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்துள்ளனர்.

மழையால் நெற்பயிர்கள் வளர துவங்கியுள்ளது. பயிர்களுக்கு சமமாக களைகள் வளர்ந்துள்ளதால் களைக்கொல்லி மருந்து அடித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர்.

முதுகுளத்துார் வட்டாரத்தில் நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால் ஏராளமான பயிர்கள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் கேசவராமன் நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது, நெற்பயிர் வளர துவங்கியது.

தற்போது வானிலை மந்தமாக நிலை வருகிறது. பயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சில நுண்ணுாட்ட சத்துக்கள் கிடைப்பதில் சிரமம் காரணமாக நெற்பயிர்கள் இலைகள் செந்நிறமாக வெளுத்து காணப்படுகிறது.

இதற்கு துத்தநாகம் என்று சத்தின் குறைபாடாக தெரிகிறது.

இதனை சரி செய்ய விவசாயிகள் துத்தநாக சல்பேட் உரம் ஏக்கருக்கு 10 கிலோ வீதத்தில் அல்லது நெல் நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் மக்கிய குப்பை அல்லது போதிய மணலுடன் வயல் முழுவதும் விதைக்க லாம்.

இதன்மூலம் செந்தாழை நோய் எனப்படும் நுண்ணுாட்ட சத்து குறைப்பாட்டினை சரி செய்யலாம்.

நெல் நுண்ணூட்ட கலவை, துத்தநாக சல்பேட் உரங்கள் வேளாண் விரிவாக்கம் மையத்தில் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிரில் காணப்படும் சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்யலாம் என்றார்.






      Dinamalar
      Follow us