ADDED : நவ 11, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாடு குறித்த ஆலோசனைகளும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தலைமையாசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். வட்டார மேலாளர் செந்தில்வேல் முன்னிலை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்தாஸ் வரவேற்றார்.
வட்டார வள பயிற்றுநர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர். பாலியல் வன் கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.
இந்நிகழ்வில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் சொக்கர் நன்றி கூறினார்.

