/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கொட்டும் மழையில் அக்னி தீர்த்தத்தில் நீராடல்
/
கொட்டும் மழையில் அக்னி தீர்த்தத்தில் நீராடல்
ADDED : அக் 22, 2025 07:52 PM

ராமேஸ்வரம்: கொட்டும் மழையில் ஐப்பசி அமாவாசையில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். கொட்டும் மழையில் பக்தர்கள் குடை பிடித்தபடி அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பண பூஜை செய்து விட்டு அக்னி தீர்த்தத்தில் புனித நீராடினார்கள்.
பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள். இதன் பின் கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.