ADDED : ஜன 03, 2026 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அண்ணா நகரில் உள்ள அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் ராமநாதபுரம் கலை இலக்கியக்கழகம் தலைவர் சுப்பையா எழுதிய அறிவியல் வளர்த்த அறிஞர்கள் என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.
கலை இலக்கியக் கழகம் பொதுச்செயலாளர் அப்துல் மாலிக் தலைமை வகித்தார். கவிஞர் மணிவண்ணன் நுாலை அறி முகம் செய்தார். முதல் பிரதியை கவிஞர் கவிதாயினி பெற்றார்.
பேராசிரியர்கள் ஸ்டாலின், செந்தில் குமார், கலை இலக்கியக் கழகம் இணைச்செய லாளர் வையச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

