/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி
/
பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி
பி.எஸ்.என்.எல்., துண்டிப்பு : வாடிக்கையாளர்கள் அவதி
ADDED : நவ 11, 2025 11:30 PM
திருவாடானை: மூன்று நாட்களாக பி.எஸ்.என்.எல்., சேவை துண்டிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர்.
பி.எஸ்.என்.எல்., குறைந்த விலையில் ரீசார்ஜ் வசதிகளை பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இருப்பினும் சிக்னல் பிரச்னையால் வாடிக்கையாளர்கள் அவதியடைகின்றனர்.
திருவாடானை மக்கள் கூறுகையில், இப் பகுதியில் பி.எஸ்.என்.எல்., பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். கடந்த மூன்று நாட்களாக டவர் கிடைக்காததால் மற்றவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் சிரமமாக உள்ளது. மின்தடை நேரங்களில் பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைப்பதில்லை.
குறிப்பாக மாதாந்திர பராமரிப்பு நாள் அன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சப்ளை நிறுத்தப்படுவதால் அன்றைய நாள் முழுவதும் பி.எஸ்.என்.எல்., சிக்னல் கிடைக்காது. பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பு துண்டிக்கப்படுகிறது.
புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல்., அறிவித்து வருகிறது. ஆனால் நெட்வொர்க் இல்லாமல் அதை வாங்கி என்ன பயன். என்னதான் சிறப்பு சலுகைகள் அறிவித்தாலும் வாடிக்கையாளர்களால் பயன்படுத்த முடியாத நிலை தான் உள்ளது என்றனர்.

