/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா
ADDED : நவ 18, 2025 03:54 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியர் பகவதி குமார் தலைமையில் நடந்தது.
பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மகாலட்சுமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் அரசு வழக்கறிஞர் கார்த்திகேயன் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.
ஆசிரியர்கள் வன்மீக நாதன், சிலம்பரசன், ரவிச்சந்திரன், ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
*ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா தலைமை ஆசிரியை பாக்கிய ரோசரி தலைமையில் நடைபெற்றது.
தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் முன்னிலை வகித்தார். பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கும் பொறுப்பு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

