sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்

/

 பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்

 பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்

 பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்


ADDED : நவ 17, 2025 01:54 AM

Google News

ADDED : நவ 17, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: சூறாவளியால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு நேற்று மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

நவ., 14ல் முதல் வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மூன்றாம் நாளான நேற்றும் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி மழையும் பெய்தது.

இதனால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின. நேற்று அதிகாலை பாம்பன் கடல் நீர்மட்டம் உயர்ந்து தெற்குவாடி கடற்கரையில் உள்ள 10க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வீடுகளில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறி மேடான பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.






      Dinamalar
      Follow us