/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொடரும் சூறாவளி : 2ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
தொடரும் சூறாவளி : 2ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
தொடரும் சூறாவளி : 2ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
தொடரும் சூறாவளி : 2ம் நாளாக ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : நவ 16, 2025 01:53 AM

ராமேஸ்வரம்: இரண்டாவது நாளாக நேற்றும் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு வீடுகளில் முடங்கினர்.
வங்கக்கடலில் சூறாவளி வீசுவதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. இதனால் நவ., 14ல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பிடிக்கச்செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் 2ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி தொடர்ந்து வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கான தடையை மீன்வளத்துறையினர் நீட்டித்தனர்.
இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் நிறுத்தப்பட்டு 2ம் நாளாக மீனவர்கள் வீடுகளில் முடங்கினர். சூறாவளி தொடர்வதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் தெரிவித்தனர்.

