/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி
/
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி
ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி ராமேஸ்வரம் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பதால் அவதி
ADDED : டிச 28, 2025 05:25 AM

ராமேஸ்வரம்: திமுக ஆட்சியின் நான்கரை ஆண்டில் ராமேஸ்வரத்தில் புதிய சாலை திட்டம் ஏதும் இல்லாததால் தற்போது ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் கோயிலில் தரிசிக்க 6 மணி நேரம் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
புனித நகராகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரத்திற்கு ஓராண்டில் மட்டும் 2 கோடி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வரு கின்றனர்.
இது 2023 முதல் 50 சதவீதம் அதிகரித்து தற்போது ஆண்டுக்கு 3 கோடி பேர் வருவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இவர்களுக்கு புதிய சாலை, கழிப்பறை வசதியை மேம்படுத்த ஒரு சதவீதம் கூட தமிழக அரசு நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தவில்லை.
இந்நிலையில் 2020க்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்த அதே சாலையை புதுப்பித்தனர். இந்த சாலையும் பாதாள சாக்கடை திட்டம், மழையால் சேதமடைந்து குண்டும், குழியுமானதால் சிவகாமி நகர், ராமநாதசுவாமி நகர், ஜல்லிமலை, ஜெ.ஜெ., நகர், அக்னி தீர்த்த சாலை வழியாக ஏராளமான வாகனத்தில் செல்லும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேதனை அடைகின்றனர்.
கிடப்பில் புறவழிச்சாலை ராமேஸ்வரத்தில் அதிகரித்து வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வருகையை கணக்கிடாமல், புதிய சாலை திட்டத்திற்கு ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்கி முன்னெடுக்காமல் தமிழக அரசு மவுனமாக இருப்பது வேதனைக்குரியது.
பிப்.,ல் ராமேஸ் வரத்தில் 6 கி.மீ.,ல் புறவழிச் சாலை அமைக்க தமிழக அரசு சர்வே எடுத்து ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கியது.
இதற்கான டெண்டர் விடப்படாமலும், நிலம் கையப்படுத்தி உரிமையாளருக்கு பணம் வழங்காமல் தமிழக அரசு கிடப்பில் போட்டதால் இந்த புதிய சாலை திட்டம் துவங்குமா என்ற கேள்வி எழுகிறது.
6 மணிநேரம் காத்திருப்பு ராமேஸ்வரத்தில் புதிய சாலை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது தினமும் 3000 முதல் 4000 வாகனங்களில் பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர்.
இவர்கள் ராமேஸ்வரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ள கோயிலுக்கு செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி 2:00 மணி நேரம் காத்திருந்தும், பின் கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்ய 6:00 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
அப்போது குடிநீர், உணவு, கழிப்பறை வசதிகளின்றி பெண்கள், முதியோர், குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
மேலும் உள்ளூர் மக்கள் டூவீலரில் பொருட்கள் வாங்க முடியாமல், மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கின்றனர். பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்திலும் வாகனங்களை நிறுத்தி சுற்றுலாப் பயணிகள் வேடிக்கை பார்ப்பதால் அங்கும் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இதனை தவிர்க்க புதிய புறவழிச் சாலை பணியை தமிழக அரசு துவக்க வேண்டும்.
மேலும் ராமநாதபுரம் குயவன்குடி முதல் தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

