sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்

/

 வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்

 வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்

 வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்த பக்தர்கள்


ADDED : நவ 18, 2025 04:03 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளான நேற்று சபரிமலை மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்கியுள்ளனர்.

மூலவர் ஐயப்பனுக்கு அஷ்டபிஷேகம், சங்கரன், சங்கரி, நவக்கிரகங்கள், மஞ்சமாதா உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனைகள் நடந்தது.

பூஜைகளை தலைமை குருசாமி மோகன் செய்திருந்தார்.

48 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் வல்லபை ஐயப்பன் கோயிலில் நடக்கிறது. வருகிற டிச., 27 அன்று பேட்டை துள்ளல் மற்றும் ஆராட்டு விழா, மண்டல பூஜை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது.

ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்கின்றனர்.

முதுகுளத்துார்: மின்வாரிய அலுவலகம் எதிரே உள்ள ஐயப்பன் கோயிலில் முதுவை சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கார்த்திகை மாத பிறப்பு பூஜை நடந்தது.

குருநாதர் திருமால் தலைமை வகித்தார். துணைக்குருநாதர் புயல்நாதன், தலைவர் கண்ணதாசன் முன்னிலை வகித்தனர்.

கணபதி ஹோமம் பூர்ணாஹூதி, யாகசால பூஜைகள் நடந்தது.படிபூஜை,பஜனை வழிபாடு நடந்தது. பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.அன்னதானம் வழங்கப்பட்டது.

பரமக்குடி: சபரிமலை மண்டல பூஜையை ஒட்டி பாரதி நகர் ஐயப்பன் கோயிலில் சரண கோஷம் முழங்க பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இதேபோல் தரைப்பாலம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியில் அபிஷேகம் நடந்தது. எமனேஸ்வரம் தர்ம சாஸ்தா கோயிலில் அபிஷேகம் நடந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். பரக்குடியில் உள்ள பெருமாள், ஈஸ்வரன், முருகன் கோயில்களிலும் பக்தர்கள் மாலை அணிந்தனர்.






      Dinamalar
      Follow us