/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆட்டோவில் இறந்து கிடந்த டிரைவர்
/
ஆட்டோவில் இறந்து கிடந்த டிரைவர்
ADDED : ஜூன் 11, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.பிளாக் பாரதி நகர் சோத்துாருணி கரையில் ஆட்டோவை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோவில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். அவர் கீழக்கரை கஸ்டம்ஸ் ரோடு சுல்தான் 55, என்பது தெரிய வந்தது. உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.