ADDED : ஜூலை 08, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; திருவாடானை அருகே குஞ்சங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருக்கு சொந்தமான டூவீலர், ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை மங்களக்குடியில் உள்ளது. நேற்று காலை 8:00 மணிக்கு கடையில் இருந்து புகை வருவதை பார்த்தவர்கள் பாலகிருஷ்ணனனுக்கு தெரிவித்தனர்.
கடையை திறந்த போது தீப்பிடித்து எரிந்தது. திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கார்த்திகேயன் மற்றும் வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் பொருட்கள் சேதமடைந்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.