sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்

/

கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்

கால்நடைகளுக்கு கால், வாய்க்காணைநோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம் கால்நடைகளுக்கு கால், வாய்க்காணை நோய் தடுப்பூசி ; நாளை சிறப்பு முகாம்


ADDED : டிச 28, 2025 05:25 AM

Google News

ADDED : டிச 28, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் கிராமங்களில் நாளை( டிச.,29) முதல் 2026 ஜன., 28 வரையிலும் நடைபெற உள்ளது.

கால் மற்றும் வாய்காணை நோயானது நாட்டினம் மற்றும் அயலின கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் இந்நோயால் கறவை மாடுகளின் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளின் சினைப் பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகள் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

எனவே கால்நடைகளை தாக்கும் கால் மற்றும் வாய்காணை நோயை கட்டுப்படுத்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தில் கால் மற்றும் வாய்க்காணை நோய் தடுப்பூசிப் பணிகள் 8வது சுற்று டிச.,29 முதல் 2026 ஜன., 28 வரையிலும் நடைபெற உள்ளது.

எனவே கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை அவர்களது கிராமங்களில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டு பயன் பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us