ADDED : செப் 07, 2025 10:48 PM

அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அருகே வண்ணாங்குண்டு கிராமத்தில் குச்சிலியமடம் மகாமுனீஸ்வரர் கோயில் உள்ளது.
பழமை வாய்ந்த ஆலமரத்தின் கீழ் உள்ள நாகநாத பெருமானுக்கு ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
சிவநாம அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை குச்சிலியமடத்து மகா முனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்தனர்.
