ADDED : ஆக 14, 2025 11:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் வாலாந்தரவை தெற்கு காட்டூர் முத்து மாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு உற்ஸவ விழா நடந்தது.ஆக.,5ல் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
தினமும் ஒயிலாட்டம், கும்மியாட்டம் மற்றும் அம்மனுக்கு அபிேஷக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஆக.,12 ல் பூஜாரி பாலு கரகம் எடுத்து வந்த போது பக்தர்கள் வரவேற்றனர். ஆக.,13ல் மாலையில் பக்தர்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கொண்டு சென்று வழுதுார் பெரிய ஊருணியில் கரைத்தனர்.