ADDED : நவ 02, 2025 10:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உழவாரப்பணி நடந்தது.
துாத்துக்குடி எட்டயபுரம் அடியவருக்கு அடியவர் உழவார பணிக்குழு மற்றும் திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப்பணி குழு சார்பில் தன்னார்வலர்கள் திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர்.
பத்மாஸனி தாயார், தெர்ப்பசயன ராமர் கோயில் உட்பிரகாரம், அர்த்தமண்டபம், வெளிப்பிரகாரம், கோசாலை, தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் இம்பீரியல் சொக்கலிங்கம் பிள்ளை, செல்வராஜ், கோயில் செயல் அலுவலர் கிரிதரன், மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்தனர்.

