ADDED : நவ 02, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் துரித அஞ்சல், பார்சல் சேவை இரவு 9:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் கூறியதாவது:
பொதுமக்கள், வணிக நிறுவனங்களின் அஞ்சல் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் ராமநாதபுரம் தலைமை அஞ்சலகத்தில் சேவை நேரத்தை இரவு 9:00 மணி வரை நீட்டித்துள்ளோம். இதில் துரித அஞ்சல், பார்சல் சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்தலாம்.
பரமக்குடி அஞ்சலகத்தில் இரவு 9:30 மணி வரையும், ராமேஸ்வரம் அஞ்சலகத்தில் இரவு 8:00 மணி வரையும் சேவை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வணிகர்கள், இரவு நேர அஞ்சல் சேவைகளை பயன்படுத்த விரும்புவோர் பயன்பெறும் வகையில் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.

