ADDED : அக் 19, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே கிடாரிகுளம் கிராமத்தில் சித்திமுத்தி விநாயகர், அய்யனார், தர்ம முனீஸ்வரர், பதினெட்டாம் படி வாழவந்த அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா நடந்தது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் பால்குடம், அக்னிசட்டி, வேல்குத்தி ஊர்வலமாக சென்றனர். வாழவந்த அம்மன், அய்யனார், தர்ம முனீஸ்வரர் உட்பட தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருள்களால் அபிஷேகம் தீபாராதனை நடந்தது. மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது.