sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை கடற்படையினர் கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்

/

இலங்கை கடற்படையினர் கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்

இலங்கை கடற்படையினர் கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்

இலங்கை கடற்படையினர் கெடுபிடி ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றம்


ADDED : அக் 16, 2025 09:53 PM

Google News

ADDED : அக் 16, 2025 09:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரின் கெடுபிடியால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து இல்லாமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்கக் கோரி அக்.,11 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். நேற்று முன்தினம் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்ற நிலையில் 280 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் இந்திய-இலங்கை எல்லையில் மீன்பிடிப்பது வழக்கம்.

ஆனால் இரவு பகலாக 7 கப்பல்களில் இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்தபடி ரோந்து சுற்றினர். இதனால் அப்பகுதியில் மீன்பிடிக்க முடியாமல் அச்சத்தில் இந்திய எல்லைக்குள் மீனவர்கள் மீன்பிடித்து நேற்று காலை ராமேஸ்வரம் கரை திரும்பினர். 4 நாட்களுக்கு பின் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்து கிடைக்காமல் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.






      Dinamalar
      Follow us