ADDED : பிப் 17, 2025 05:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி, : தொண்டி அருகே வட்டாணம் புதுக்குடியை சேர்ந்தவர் முருகானந்தம் 36. கூலி தொழிலாளி. வீட்டிலிருந்தவர் மூன்று நாட்களுக்கு முன்பு மாயமானார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் இறந்து உடல் நீரில் மிதந்தது. முருகானந்தம், கண்மாய் நீரில் வலையை விரித்து மீன்பிடித்த போது தவறி விழுந்து இறந்தார். எஸ்.பி.பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.

