sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

விதிமீறி ரோடு பணிக்கு சவடு மண்

/

விதிமீறி ரோடு பணிக்கு சவடு மண்

விதிமீறி ரோடு பணிக்கு சவடு மண்

விதிமீறி ரோடு பணிக்கு சவடு மண்

1


ADDED : டிச 03, 2024 05:24 AM

Google News

ADDED : டிச 03, 2024 05:24 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியில் உள்ள ஜல்லிமலை மற்றும் ஜல்லிமலை தெற்கு பகுதியில் குடியிருக்கும் மக்கள் வசதிக்காக 9 இடங்களில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்படுகிறது. இப்பணியை தனியார் ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்கிய நிலையில் ரோடு பணிக்கு எம் சாண்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என ஒப்பந்த திட்ட அறிக்கையில் நகராட்சி தெரிவித்துஉள்ளது.

ஆனால் நகராட்சி உத்தரவை மீறி ஜல்லிமலை தெருவில் எம் சாண்ட்வுடன் சவடு மணலை கலந்து ரோடு பணிக்கு பயன்படுத்துகின்றனர். ராமேஸ்வரம் பாம்பன் உள்ளிட்ட தீவுப் பகுதியில் சவடு மணல் எடுக்க அரசு அனுமதி இல்லை.

இந்நிலையில் விதி மீறி சவடு மணலை பயன்படுத்துவதை தடுக்காமல் அதிகாரிகள் அனுமதித்துள்ளனர். இந்த சவடு மணலை அள்ளவும், ரோடு பணிக்கு பயன்படுத்தவும் யார் அனுமதி கொடுத்தது என நகராட்சி அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ரோடுபணிக்கு சவடு மணல் பயன்படுத்த அனுமதி இல்லை. இருப்பினும் சவடு மணல் பயன்படுத்தியது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us