/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து விரைவில் வழங்க ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து விரைவில் வழங்க ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து விரைவில் வழங்க ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
எஸ்.ஐ.ஆர்., படிவங்களை பூர்த்தி செய்து விரைவில் வழங்க ஆர்.டி.ஓ., வலியுறுத்தல்
ADDED : நவ 24, 2025 06:20 AM
பரமக்குடி: -பரமக்குடி 209 (தனி) சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் படிவங்களை கடைசிநாள் வரை காத்திருக்காமல், விரைவில் பூர்த்தி செய்து மக்கள் வழங்க வேண்டும் என ஆர்.டி.ஓ., சரவண பெருமாள் தெரிவித்தார்.
இதன்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களையும் இதற்கு முந்தைய (2002) தீவிர சிறப்பு திருத்தத்துடன் ஒப்பீடு செய்வதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நவ.,4ல் துவங்கி பூர்த்தி செய்த படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு வருகிறது. இப்பணி டிச.,4ல் நிறைவடைகிறது.
ஒட்டுமொத்த மனுக்களையும் கடைசி நாளில் பெற்று பதிவேற்றம் செய்வது கடினம் என்பதால் வாக்காளர்கள் உடனுக்குடன் பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
இதற்காக https://erolls.tn.gov.in/electoralserch மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR 2002.aspx மூலம் சட்டசபை தொகுதி, பாகம் எண் அளித்து வாக்காளர்களின் விபரங்கள் பெற முடியும்.
மேலும் கணக்கீட்டு படிவங்களை பெறாத வாக்காளர்கள் நிலை அலுவலரை அல்லது உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இதன்படி பரமக்குடி நகராட்சி ஆணையாளர், பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட தாசில்தார்களை தொடர்பு கொள்ளலாம்.
இதேபோல் அனைத்து தாலுகா, நகராட்சி அலுவலகத்தில் உதவி மையங்கள் செயல்படுகிறது.
ஆகவே இந்த வசதிகளை மக்கள் பயன் படுத்திக் கொண்டு படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும், என்றார்.

