ADDED : அக் 13, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : -சாயல்குடி அருகே எஸ்.புல்லந்தையில் விவசாயி கருத்த பாண்டி என்பவரது வீட்டில் 7 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பு சமையலறை பகுதியில் பதுங்கி இருந்தது.
இதையடுத்து சாயல்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் பாதுகாப்புடன் சாரைப்பாம்பை பிடித்தனர். இதேபோன்று சாயல்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சிவன் கோயில் வளாகத்தில் 5 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. அதனையும் பத்திரமாக மீட்டு சாயல்குடி வனப்பகுதியில் பாம்புகளை விட்டுள்ளனர்.