sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சேறும் சகதியுமான ரோட்டால் அவதி

/

சேறும் சகதியுமான ரோட்டால் அவதி

சேறும் சகதியுமான ரோட்டால் அவதி

சேறும் சகதியுமான ரோட்டால் அவதி


ADDED : அக் 23, 2025 11:24 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே உலையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மீசல், உலையூர், முத்துசெல்லாபுரம், முத்துவிஜயபுரம் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு ரோட்டில் இருந்து 200 மீ.,ல் அரசு பள்ளி கட்டடம் உள்ளது. கடந்த சில மாதத்திற்கு முன்பு பள்ளிக்கு செல்லும் வழியில் குறிப்பிட்ட துாரம் மட்டும் புதிதாக பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டது.

மீதமுள்ள துாரம் மணல் தரையாக உள்ளது. தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மழை பெய்கிறது. பள்ளிக்கு செல்லும் ரோடு சேறும் சகதியுமாக மாறி உள்ளதால் நடக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். டூவீலர், சைக்கிளில் செல்வதற்கே முகம் சுளிக்கின்றனர். சில மாணவர்கள் வழுக்கி விழும் நிலை உள்ளது.

எனவே பள்ளிக்கு செல்லும் பாதையில் முழுமையாக பேவர் பிளாக் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us