/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு பள்ளியில் ஆங்காங்கே இடிந்துள்ளது சுற்றுச்சுவர்
/
அரசு பள்ளியில் ஆங்காங்கே இடிந்துள்ளது சுற்றுச்சுவர்
அரசு பள்ளியில் ஆங்காங்கே இடிந்துள்ளது சுற்றுச்சுவர்
அரசு பள்ளியில் ஆங்காங்கே இடிந்துள்ளது சுற்றுச்சுவர்
ADDED : ஜூலை 24, 2025 10:21 PM

கமுதி; கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் சேதமடைந்து ஆங்காங்கே இடிந்து விழுந்து திறந்த வெளியாக உள்ளது.
பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புல்வாய்க்குளம், சாமிப்பட்டி, பேரையூர், கள்ளிகுளம், சேர்ந்தகோட்டை உட்பட அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பள்ளியை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.
அதன் பிறகு முறையாக பராமரிப்பு செய்யப்படாததால் ஆங்காங்கே விரிசலடைந்துள்ளது. தற்போது 5க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து திறந்த வெளியாக உள்ளது.
இதனால் பள்ளி நேரத்தில் கால்நடைகள் திரியும் அபாயம் உள்ளது.
எனவே பள்ளி முழுவதும் சுற்றுச்சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.