/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி விலக்கில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படுமா
/
திருப்புல்லாணி விலக்கில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படுமா
திருப்புல்லாணி விலக்கில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படுமா
திருப்புல்லாணி விலக்கில் போலீஸ் அவுட் போஸ்ட் செயல்படுமா
ADDED : ஜூலை 24, 2025 10:22 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி விலக்கு பகுதியில் உள்ள போலீஸ் அவுட் போஸ்ட் முற்றிலும் செயல்படாமல் உள்ளதால் விபத்துகள், குற்றச்செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் ரோட்டில் திருப்புல்லாணி செல்லும் விலக்கு பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
கீழக்கரை மெயின் ரோட்டில் இருந்து திருப்புல்லாணிக்கு ரோடு பிரிவதால் இப்பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
வாகனங்களில் செல்வோர் அதிக வேகத்தில் செல்வதை தவிர்ப்பார்கள், போலீஸ் அவுட் போஸ்ட் இருப்பதால் குற்றச்செயல்களில் ஈடுபட தயக்கம் காட்டுவார்கள்.
தற்போது இந்த போலீஸ் அவுட் போஸ்ட் பயன்பாட்டில் இல்லாததால் பாதுகாப்பற்ற நிலை உள்ளது.
இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை வேறு திறக்கப்பட்டுள்ளதால் எப்போதும் இந்த பகுதி ரோட்டோரங்களில் மதுப்பிரியர்கள் தான் திருப்புல்லாணிக்கு வரும் பக்தர்களை வரவேற்கின்றனர். இந்த போலீஸ் அவுட் போஸ்ட் பகுதியை மேம்படுத்தி போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்புல்லாணி பகுதி பொதுமக்கள் விரும்புகின்றனர்.