நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நேற்று முன்தினம் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக உள்ள திருவாசகத்தில் 51 பதிகங்கள் உள்ளன.
அதில் உள்ள 658 பாடல்களை திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தை சேர்ந்த சிவனடியார்கள், முருகேசன், கவிதா ஆகியோர் காலை முதல் மாலை வரை பாடினர். மாலை நிறைவு நிகழ்ச்சியில் திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன் கலந்து கொண்டார்.

