sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வேலை இல்லாத படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

/

வேலை இல்லாத படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை இல்லாத படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை இல்லாத படித்த இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 12, 2025 05:39 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் : மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் ஆகியும் எவ்வித பணி வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 படித்தவர்கள், பட்டதாரிகள்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி, 10ம் வகுப்பில் தோல்வி அடைந்திருந்தால் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சிக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சிக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 உதவித் தொகையாக மூன்று ஆண்டுகளுக்கு நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரம், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்குள்ளும், மற்றவர்களுக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உதவித் தொகை கல்வித்தகுதிக்கு ஏற்றவாறு ரூ.600 முதல் ரூ.1000 வரை வழங்கப்படும். https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அனைத்து சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.-






      Dinamalar
      Follow us