/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஆலங்குளம் அருகே பராமரிப்பின்றி தடுப்பணை
/
எஸ்.ஆலங்குளம் அருகே பராமரிப்பின்றி தடுப்பணை
ADDED : நவ 14, 2025 04:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: எஸ்.ஆலங்குளம் கிராமத்தில் 2001ம் ஆண்டில் 70 மீ.,க்கு தடுப்பணை கட்டப்பட்டது. இதன் முகத்துவாரத்தில் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுவதால் தண்ணீர் சேமிக்க வழியின்றி உள்ளது.
இதனால் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய வரத்து கால்வாய் துார்ந்து போய் மண் மேவி உள்ளது. கண்மாய் மற்றும் பொதுப்பணி பாசனத்துறை அதிகாரிகள் எஸ். ஆலங்குளம் தர்கா செல்லும் வழியில் உள்ள தடுப்பணையை சீரமைத்து கரைகளை பலப்படுத்தினால் பருவமழை காலங்களில் தண்ணீர் தேங்கி அப்பகுதியில் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

