sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

/

 இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

 இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்

 இருள் சூழ்ந்த ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 31, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு பழுது காரணமாக இருள் சூழ்ந்துள்ளதால் இரவில் பஸ் ஸ்டாண்ட் வரும் பெண் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

ஆனந்துார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக விளங்குவதால் அங்குள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு செல்லும் வகையில் பஸ் போக்குவரத்து உள்ளதாலும், தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு உயர் கோபுர மின் விளக்கு (ஹைமாஸ் விளக்கு) 2 மாதத்திற்கும் மேலாக பஸ் ஸ்டாண்ட் மையத்தில் அமைந்துள்ள மின் விளக்குகள் அரைக்கம்பத்தில் தொங்கிய வண்ணம் உள்ளன.

கம்பத்தில் உள்ள விளக்குகளில் ஒரு விளக்கு மட்டுமே வெளிச்சம் தருகின்றன. மற்ற விளக்குகள் அனைத்தும் பழுதடைந்துள்ளதால் பஸ் ஸ்டாண்டின் பெரும்பாலான பகுதிகள் இருள் சூழ்ந்துள்ளன. இதனால் இரவில் வரும் பெண் பயணிகளும் குழந்தைகளும் அச்சத்துடன் பஸ் ஸ்டாண்டில் காத்திருக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us