sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 மனைவி கொலை : கணவர் சரண்

/

 மனைவி கொலை : கணவர் சரண்

 மனைவி கொலை : கணவர் சரண்

 மனைவி கொலை : கணவர் சரண்


ADDED : நவ 27, 2025 01:57 AM

Google News

ADDED : நவ 27, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் தகாத உறவில் ஈடுபட்ட மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் போலீசில் சரணடைந்தார்.

பரமக்குடி வசந்தம் நகரை சேர்ந்தவர் செல்வா. இவரது மனைவி கஸ்துாரி 48. இவர்களுக்கு குழந்தை இல்லை. செல்வாவின் நண்பர் கார்மேகம் 65. இவரது மனைவி 2014ல் உயிரிழந்தார்.

இதனால் கஸ்துாரியுடன் கார்மேகத்திற்கு தொடர்பு ஏற்பட்டது. 2020ல் கொரோனா பாதித்து செல்வா இறந்தார். இருவரும் ராமேஸ்வரத்தில் சவுந்தரிஅம்மன் கோவில் தெருவில் கணவன் மனைவியாக வாடகை வீட்டில் தங்கினர்.

இந்நிலையில் நேற்று கஸ்துாரியை கார்மேகம் கத்தியால் வயிற்றில் குத்திக் கொலை செய்து விட்டு ராமேஸ்வரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

'கடந்த இரு ஆண்டுகளாக மனைவி கஸ்துாரி ராமேஸ்வரத்தை சேர்ந்த வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்டார். பலமுறை கண்டித்தும் பயனில்லை. இதனால் ஆத்திரத்தில் குத்திக் கொலை செய்ததாக' கார்மேகம் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். கார்மேகத்தை இன்ஸ்பெக்டர் கார்த்திக் ராஜா கைது செய்து சிறையில் அடைத்தார்.






      Dinamalar
      Follow us