sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா

/

மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா

மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா

மதுரை--ராமேஸ்வரம் இடையே மெமு ரயில்கள் இயக்கப்படுமா


ADDED : அக் 08, 2025 02:46 AM

Google News

ADDED : அக் 08, 2025 02:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:ராமேஸ்வரம்--மதுரை இடையே பயணிகள் நெரிசலை தவிர்க்க மெமு ரயில்களை இயக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு தினமும் அதிகாலை 5:45, காலை 11:40, மாலை 6:15 மணிக்கும், மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து காலை 6:50, மதியம் 1:50, மாலை 6:15 மணிக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருவோர் பெரும்பாலும் மதுரை வந்து ரயில்களில் பயணிக்கின்றனர். ஆனால் மூன்று ரயில்கள் மட்டுமே இருப்பதால் அவர்கள் பெரும்பாலும் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.

மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் மற்றும் இரவில் கூடுதல் ரயில்கள் சேவை இல்லாதது பயணிகளிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்--ராமேஸ்வரம் இடையே மின்மயமாக்கல் பணி நடந்து வந்ததால் ரயில்கள் டீசல் இன்ஜின் கொண்டு இயக்கப்பட்டன. இதனால் இந்த வழித்திடத்தில் அதிகமான ரயில்கள் இயக்க முடியாத சூழல் இருந்தது.

தற்போது மின்மயமாக்கல் பணி முடிவடைந்து மின் இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

எனவே மதுரை- - ராமேஸ்வரம் இடையே பயணிகள் வசதிக்காக மெமு ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் இருந்து காலை 7:00 மணி, மதுரையில் இருந்து இரவு 8:00 மணிக்கு கூடுதல் பயணிகள் ரயில்களை இயக்கினால் பணிக்கு செல்வோருக்கு வசதியாக இருக்கும்.

அதே போல் சென்னை--புதுச்சேரி, கோவை- -மேட்டுப்பாளையம் போன்ற இரு முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் அதிவேக மெமு ரயில்களை மதுரை--ராமேஸ்வரம் இடையே இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

இதனால் பயண நேரம் குறைவதுடன் கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்றனர்.

ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ராமேஸ்வரத்தில் அதிக அளவிலான ரயில்களை பராமரிக்க போதிய இடவசதி இல்லை.

புதிய பணிமனை அமைப்பதற்கான ஆய்வு நடக்கிறது. அதற்கு பின் ராமேஸ்வரத்திற்கு கூடுதல் ரயில்கள் சேவை வழங்கப்படும் என்றனர்.






      Dinamalar
      Follow us