/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
/
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி தாசில்தார் ஆபீஸ் முற்றுகை
ADDED : ஜன 11, 2025 01:52 AM
ஓமலுார்,: ஓமலுார் அருகே புளியம்பட்டி, ஆதிதிராவிடர் காலனியில், மக்கள் பயன்படுத்தும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில், மக்கள் மனு அளித்திருந்தனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், 'நோட்டீஸ்' வழங்கிய நிலையில், இறுதி கட்ட நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினர். அதிருப்தி அடைந்த அப்பகுதி மக்கள், நேற்று, ஓமலுார் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது வருவாய்த்துறை அதிகாரிகள், 'ஓமலுார் பி.டி.ஓ.,விடம் பேசிவிட்டு, பொங்கல் பண்டிகை முடிந்த பின், ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறினர். இதனால், ஒரு மணி நேரத்துக்கு பின், மக்கள் கலைந்து சென்றனர்.

